Sunday, 14 March 2021

🔰🔰முருகப்பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம் - சுந்தர சேனைத்தலைவர்🔰🔰

 

 

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வம்சம் என்று பெருமையாக சொல்லுங்கள் , அதற்கான ஆதாரங்கள் இன்றளவும் சிதரம்பம் தில்லை கோவிலிலும் , சங்கரன்கோயில் சங்கர நாராயணர் கோவிலிலும் 800 வருடங்களாக அதன் உரிமைகள் வீரபாகு சேனைத்தலைவர் வம்ச வழியாகிய சேனைத்தலைவர் குல மக்களுக்கு இன்றளவும் கொடுக்க பட்டு வருகிறது , அந்த உரிமைக்கான செப்பு பட்டயங்களில் பார்வதி சிலம்பில் உதித்த நவ வீர வீரபாகு வம்ச #சேனைத்தலைவர் குல மக்கள் என்றே இருக்கும் . சேனையார் , சேனைத்தலைவர் என்கிற நமது இனத்தின் குல பெயர் 8 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளிலில் தெளிவாக இன்றளவும் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமிகள் கோவிலில் உள்ளது , சோழன் காலத்தில் ஈழப்போரில் பங்குகொண்ட சேனையார் குல மக்களின் அறக்கட்டளை என்று தெளிவாக உள்ளது , இன்றும் அக்கோயிலை சுற்றி சேனைத்தலைவர் இன மக்கள் வாழ்ந்து கொண்டு உள்ளனர் . எங்கும் எவருக்காகவும் விட்டுக்கொடுக்காதே நீ சேனைத்தலைவர் என்று நெஞ்சை நிமிர்த்து சொல் , #வீரபாகுசேனைத்தலைவர் வம்ச மக்கள் என்று . பட்டங்களில் நீ உன்னை அடையாளப்படுத்தினால் உனக்கான அடையாளம் இல்லாமலே சென்று விடும் , உன்னை நீ அடையாளப்படுத்தாத வரை நம் இனம் என்றும் எழுச்சி கொள்ளாது . பட்டங்களை சொல் சேனைத்தலைவர் பிள்ளைமார் சேனைத்தலைவர் மூப்பனார் சேனைத்தலைவர் முதலியார் சேனைத்தலைவர் செட்டியார் என்று ஆனால் என்றும் சேனைத்தலைவர் என்ற நம் குல பெயரை விட்டு கொடுக்காதே . எங்கெல்லாம் சேனைத்தலைவர் இனம் அவமானப்படுகிறதோ , எங்கெல்லாம் சேனைத்தலைவர் இனம் ஏமாற்ற படுகிறதோ அங்கு கண்டிப்பாக தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை தன் இனத்திற்கான கடமையை செய்யும் . சுந்தர சேனைத்தலைவர் மாநில செயலாளர் தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை

Saturday, 20 February 2021

கொடிக்கால் வேளாள சேனைத்தலைவர்

 

#தேனி மாவட்டம் , #கொடிக்கால்வேளாள #சேனைத்தலைவர் கோட்டையில் நடக்கும் திருவிழா சிறப்பாக நடைபெற தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவை வாழ்த்துகிறது .
இவர்கள் பயன்படுத்தும் திருவிழா பேனர்கள் மற்றும் பதிவுகளில் வ.உ .சி யை பயண்படுத்தி வந்த நிலையில் பல போராட்டங்களுக்கு பிறகு சேனைத்தலைவர் இனத்தின் மூத்த தலைமகன் குல கடவுள் மாவீரன் முருக பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் திருவுருவத்தை பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் பல வருட போராட்டத்தில் சிறு வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்பிக்கை மனதில் உதிக்கிறது .
தேனி மாவட்டத்தில் உள்ள #கொடிக்கால்வேளாள #சேனைத்தலைவர் வாழும் அணைத்து ஊர்களிலும் மாவீரன் முருக பெருமானின் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் அவர்களின் திருவுருவத்தை திறப்பதே தமிழ்நாடு சேனைத்தலைவர் வீரபாகு பேரவையின் அடுத்த இலக்கு .
 


 

தேனி கொடிக்கால் பிள்ளைமார்

 தேனி மாவட்டத்தில் அதிக அளவில் #கொடிக்கால்பிள்ளைமார் பட்டத்தில் வாழும் சேனைத்தலைவர் இனத்தின் திருவிழா ஒரே தலைவர் வ.உ.சி ஐயா தான் ஏனென்றால் இன்றும் அவர்கள் பிள்ளை என்ற பட்டத்தில் வ.உ.சி ஐயா பிள்ளை இனம் என்று நம்பி கொண்டு இருப்பதால் .

#கொடிக்கால்வேளாளர் #சேனைத்தலைவர் பெருமக்களே நீ என்றும் வீரத்தளபதி வீரபாகு சேனைத்தலைவர் வழி வந்த வம்சம் தான் .
500 தலை கட்டுக்கு மேல் #கொடிக்கால்பிள்ளைமார் சேனைத்தலைவர் மக்கள் உள்ள அரண்மனைப்புதூர் , தேனி மாவட்டத்தில் தேசிய தலைவர் வ.உ.சி அவர்களின் பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடி திருவிழா போல் செழிப்பாக கொண்டாடி உள்ளனர் .
ஆனாலும் நம் குல முதற் தலைவன் வீரத்தளபதி #வீரபாகுசேனைத்தலைவர் அவர்களை கொண்டாடினால் இன்றும் சிறப்பாக இருக்கும் என்பதை இந்த சமயத்தில் #கொடிக்கால்வேளாள #சேனைத்தலைவர் பெருமக்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் .
வீரம் என்பது யாதெனில் PCR பொய் வழக்கு போடப்பட்டதால் அவன் காதை கடித்து துப்பி விட்டு இப்பம் போடுடே என்று சொன்ன தேனி மாவட்ட கொடிக்கால் பிள்ளைமார் சேனைத்தலைவர் வம்சம் மக்களே நீ முதலில் எவர் என்று தெரிந்து கொள் .